பக்கம்:பரகாலன் பைந்தமிழ்.pdf/140

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பரகாலன் பைந்தமிழ்

குகின்றனர். இங்ங்னம் தரையில் எழுந்தருளியிருக்க ந்ததற்கு ஒரு புராண வரலாறு உண்டு.”

அர்ச்சையில் எம்பெருமானைக் காணும் திருமங்கை யாழ்வாருக்கு எம்பெருமானின் வியூக விபவாவதார வீரச் செயல்கள் பலவற்றைத் திருவுள்ளங்கொண்டு அவரது பெருமைக் குணத்தில் தம் மனத்தை ஈடுபடுத்து கின்றார். பெரும்பாலும் கண்ணனது வீரச் செயல் களே அவரது திருவுள்ளத்தில் ஒருசேரத் தோன்றி குமிழியிடத் தொடங்குகின்றன. அவற்றைப் பாசுரங்க ளாகப் பேசி இனியராகின்றார். திருக்கடல் மல்லைப் பெருமான் பாலனாய் ஏழுலகுண்டு உமிழ்ந்தவன்; பாற் கடலில் துயில் அமர்ந்து பல்வேறு செயல்களைக் கவனிப் பவன்; கடும்பரிமேல் கற்கியாக வரப்போகின்றவன்; வளையருப்பின் ஏனமாகிப் பாரிடத்தை எயிறு கீற இடத்தவன்; இருநிலனும் பெருவிசும்பும் இரண்டடி ட்துப் போதா என்று அளந்து கண்டவன்; இலங்கையி லுள்ள வலியரக்கர் பெருவரைத் தோள் இறும்படி தெரித்துவன்; மாயமான் மாயப் பின் தொடர்ந்தவன்; அணிகள் பூண்ட அவுனர் கோனின் ஆகத்தைப் பிறை எயிற்று அடல் அரியாய் நின்று பிளந்தெறிந்த பெம்மான்; பெண்ணாகி இன்னமுதம் வஞ்சித்து அரக்கர்கள் உண்ணாதபடி செய்தவன், கசேந்திரனுடைய இடர் கனைந்தவன். இந்த எம்பெருமானே நின்றவூர் நித்திலமாக இருப்பவன்,தஞ்சை மாமணிக்கோயிலில் எழுந்தருளியிருப் யவன்; தண் ஆர்ந்த வருபுனல்சூழ் திருமெய்யத்தடவரை மேல் பனங்கள் மேவிக் கிடக்கின்றவன்; நான்கு வேதங் ಕಪೆ, ஐந்து வேள்விகள், ஆறு அங்கங்கள் இவற்றைக் கண்டவன்.

-

9. தொ. கா. திருப்பதிகள் (கட்டுரை-13) பக். 219

காண்க.