இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
பரகாலன் பைந்தமிழ்
நிலைமையை அவருக்கு அறிவித்தால் போதுமானது; காரியம் தானாகவே நடைபெறும்.
அடுத்த பாசுரத்திலும் புள்ளினங்களை நோக்கி, தெய்வச் சிலையாற்கு என் சிந்தை நோய் செப்புமினே' என்று கூறுகின்றாள். 'சீதையின் சிந்தை நோயைத தவிர்ப்பதற்கென்றே வில் பிடித்து நிற்கும் அவர், அந்த வில்லைக் கொண்டே என் சிந்தை நோயையும் தவிர்க்கும் படி சொல்லுங்கள்' என்றுகின்றாள் போலும்.
இங்ங்ணம் ஆழ்வார் நாயகி பல இடங்களில் தூது விட்டாலும் அடைத்தக்க பொருள் ஒன்றேயாகும். ஐந்து நிலைகளிலும் இருக்கும் எம்பெருமான் ஒருவரேயாவர்.