28 பரகாலன் பைந்தமிழ்
`ए५
அருள்மாரி யரட்டமுக்கி அடையார்சீயம்
......பரகாலன் கலியன் (3. 4:10)
கலிகன்றி (3. 2:10)
என்ற பாசுரப் பகுதிகள் இவற்றைத் தெரிவிக்கின்றன. இவர் பெருஞ்சேனையையுடையவர், யானைப்படை குதிரைப்படைகளையுடையவர், வாட்போரில் பகைவர் களின் உடல் துணிக்க வல்லவர் என்பன போன்ற தம் சேனையைச் சிறப்பித்துப் பேசும் செய்களை,
வாள்திறல், தானை
மங்கையர் தலைன் (10.9:10)
அமரில் கடமா
களியானை வல்லான் (2,4:10)
கடமாருங் கருங்களிறு வல்லான்
வெல்போர்க் கலிகன்றி (2.5:10)
ஆடல் மா வலவன் (5.8:10)
வாமான்தேர்ப் பரகாலன் (7.4:10)
ஆலுமா வலவன் கலிகன்றி (9.10:18)
மருவலர்தம் உடல்துணிய
வாள் வீசும் பரகாலன் (3.9:10)
என்ற பாசுரப் பகுதிகளால் அறியலாம்.
இவரது பெருஞ்செல்வ நிலையும், பெரிய வள்ளண் மையும், அதனால் புலவர் போற்றும் புகழும், பொய் மொழியொன்றில்லாத இவரது மெய்ம்மைத் திறமும், கைம்மாறு கருதாது மாநிலத்தார்க்கு வழங்கும் மாரி போன்ற இவரது பேரருளும், இவரது தமிழ்ப் புலமையும்