பக்கம்:பரிசு, அண்ணாதுரை.pdf/5

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முன்னுரை:- மலிவுப்பதிப்பு வரிசைகள்! நாட்டிலே இன்று எங்கும் எல்லா பதிப்பகங்களிலும் எந்தெந்த நூல்களை வெளியிடலாமென்ற எண்ணத்தை எழுப்பிவிட்டு, பதிப்பாசிரி யர்களின் மூளையை சாணைக்கல்லில் தீட்ட விட்டிருக்கும் ஒரு போர்முரசாக விளங்கி வருகிறது. இந்த நிலைமை நீடித்தால்- முடிவு என்னவென்பதை யாரும் எளிதில் கணிக்க இயலாது. பெயர் பெற்ற ஒருசில எழுத்தாளர்கள் செத்தாலும் செத்தார்கள் இப்படி பெரும் பெரும் கதைகளாகவும் கவிதைகளாகவும் எழுதிவைத்து விட்டு செத்திருக்கக்கூடாது. அப்படி செத்தவர் களும் தாங்கள் எழுதியவைகளை தமிழ் நாட்டு பதிப்பாசிரியர்கள் கண்களுக்குத் தெரியும்படி வைத்துவிட்டு நிச்சயம் அவர் கள் செத்திருக்கக்கூடாது. நாட்டிலே மடமை மறையக்கூடாது-முட்டாள்கள் என்றும் நிறைந்திருந்தால் தான் மெருகு குலையாத மேனியர்கள் சுகமாக வாழ்