பக்கம்:பரிசு, வெள்ளியங்காட்டான்.pdf/27

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

11



4. எதிரும் புதிரும்

கள்ளூரும் கமலங் கண்டு களிவண்டு மதுவுண் டென்ன, அள்ளூர்நன் முல்லை யாரின் அருந்தமிழ்ப் பாவி லன்றும் உள்ளுறு முவப்போ டொன்றி உறிஞிடும் பொழுதங் குற்றுப் புள்ளாரும் கூந்தல் பொன்மான் புகுந்தாள்,புன் முறுவல் பூத்தே !

"அடைநோகப் பூத்த லர்ந்த அரவிந்த மனைய வொண்கண் கடைநோக வழியைக் கண்டும், கனக்கும்பைங் குரும்பை தாங்கா திடைநோகக் குழிமே டேறி யிறங்கியே நடந்து வந்தும், துடைநோகு மாறிங் குற்றாய் தோகையே துயரோ ராதே !

"ஒளிக்கொன்றும்முத்துப்பல்,கை,
யுவக்கவே காட்டிக் கூப்பும் கிளிக்கின்று வந்தால் குந்தக் கிளையுண்டென் றுரைத்தோர் தான்யார் ?
அளிக்கென்றும் மதுநல் காமல் அந்திப்போ தலர்ந்த அல்லீ ! களிக்கின்ற விதமிங் குற்ற காரண மதுயா" தென்றேன்.

"யோசித்துப் பார்த்தே னுான்றி, ஊணுறக் கம்விட் டின்றும் ! யாசித்து வந்தே னுக்கன்
றகம் நனி மகிழ, ஆண்பெண் நேசித்து வாழும் வாழ்வென் நினைவிலே பதித்தீர் ; நேரத் தேசத்தில், 'கவிஞர் வாக்கே தெய்வ வாக்" கென்பர், தேர்ந்தோர் !