பக்கம்:பரிபாடல்-அகமும் புறமும்-மூலமும் உரையும்.pdf/125

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4ుబ్రiఉడితీకాత * ഞഖങ്ങധ (11) 119 ஒளிவீசும் வேற்படையை ஏந்தி நின்றனர் சிலர் கையிற் பற்றிச் செலுத்துதற்குரிய வாரையும், குதிரைகளை அடித்து ஒட்டுதற் குரிய கைக்கோலினையும் கைக்கொண்டவராகக், கொடி விளங்கும் திண்ணிய தேர்மீது சிலர் ஏறினர். புள்ளொத்த விரைந்த செலவையுடைய குதிரைகளையும், மேற்பட்டத்தை யுடைய யானைகளையும், வெள்ளமாகப் பரந்து செல்லும் ஆற்றுநீருட் செலுத்திச் செலுத்தித் திரிந்தனர் சிலர். கண்ணி றைந்த அழகுடைய மூங்கிற்கோலாகிய பீச்சாங்குழலில் நீரை நிறைத்துப் பிறர்மீது செலுத்தினர் சிலர். அங்ங்னம் தம்மேல் நீரைச் செலுத்தியவர்மீது, வண்ண நீர் நிறைந்த வட்டினைத் தாமும் விட்டெறிந்து களித்தனர் சிலர். மணம் பரப்பும் மாலை யினாற் சுழற்றி அடித்தனர் சிலர். அவ்வாறு அடித்தவர் மீது அறுத்துச் செய்யப் பெற்றதும், சொரசொரப் பைக் கொண்டது மான கொம்பிலே நீரை முகந்து வீசிக் களித்தனர் சிலர். - இவ்வாறு, ஆய்ந்தெடுத்துத் தொடுத்த மலர்களைக் கொண்ட மாலையினை உடையவரான பெண்கள் பலரும், தத்தம் காதலரோடுங் கூடியவராக, நாள்முழுதும் நீராடித் திளைத்தனர். அழகுபொருந்திய அந்தக் காட்சியின் சிறப்பைச் சொல்லு மிடத்து, வையைக் கரையாகிய அவ்விடமானது, களத்தே வென்று பகைவரது குதிரைகளைக் கவர்ந்து வருகின்ற சிறப்பை யுடையவனும், பாய்ந்து செல்லும் தேரினைக் கொண்டவனுமான பாண்டியன், தன் பகைவரோடு போரிட்டிருக்கும் போர்க்களத் துள் ஒன்றைப்போலவே ஆரவாரத்துடன் தோற்றியது எனலாம். சொற்பொருள் : விதிர்ப்போர் . சுழற்றுவோர். குந்தம் - வேல்; குந்தாலிப்படையும் ஆகும். திண்தேர்-திண்மையான தேர்; வலிய தேர். புள் - பறவை. பொலம் - பொன். கைம்மா - யானை, வட்டித்தல் சுழற்றி அடித்தல். மருப்பு - கொம்பு. விளக்கம் : காதலர்கள் தம்மோடு விளையாட்டயர்ந்த வையையாகிய அவ்விடம், ஒரு போர்க்களத்தைப் போல் விளங்கிற்று என்கின்றனர்.' - - தெளிந்து வரும் நீர் நீரணி வெறிசெறி மலருறு கமழ்தண் தார்வரை யகலத்தவ் வேரணி நேரிழை ஒளிதிகழ் தகைவகை செறி பொறி - புனைவினைப் பொலங் கோதை யவரொடு 65 பாகர் இறைவழை மதுநுகர்பு களிபரந்து நாகரினல் வளவினை வயவேற நளிபுணர்மார் காரிகை மது ஒருவரினொருவர் கண்ணிற் கவர்புறச் சீரமை பாடற் பயத்தாற் கிளர் செவிதெவி உம்பர் உறையும் ஒளிகிளர்வான் ஊர்பாடும். 70