பக்கம்:பருவ மழை.pdf/134

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மதவெறியால் நாடுஇரு கூரு லுைம் மனிதாபிமானத்தை மதித்தல் வேண்டும் இதமறியாக் கொடியவர்கள் படையை ஏவி இழைத்துவிட்ட இன்னலுக்கு இரக்கம் காட்டி நிதி, உணவு, உடை, மருந்து உதவி நல்கி, நெஞ்சப்புண் ஆற்றிடகல் உரைகள் கூறிப் புதியசுதந் திரப்பொலிவைப் பெற்று வங்கம் புவியிலுயர் இன்பமெல்லாம் பெற்றுவாழ்க! கொலைக்கருவி வகைவகையாய்க் குவித்து வைத்துக் கோடிகோடிப் பொருள்கொடுக்கும் கொடியோர்க் கெல்லாம் விலைக்குவிற்றுச் சுயகலத்தைப் பெருக்கிக் கொள்ளும் வெறிபிடித்த வல்லரசுக் கூட்ட மிங்கே நிலைத்திருக்கும் வரை அமைதி நீதி யெங்கே ங்லைத்திருக்கும் அடக்குமுறைப் பேயாட் டத்தால் உலைக்களத்தில் மெழுகெனவே உருகும் மக்கள் உளக்குமுறல் தனமதிப்போர் உலகில் யாரே? தரைப்படையும் கடற்படையும் விமானக்குண்டும் தாக்குகின்ற கொடுமையெல்லாம் தாங்கிக் கொண்டு உரைப்பதற்கு வரலாற்றில் உவமை யில்லா உறுதியுடன் உணர்ச்சியுடன் உரிமை வேட்கை நெருப்பிடையே நீந்துகின்ற முஜ்பீர் ரகுமான் நெஞ்சுரத்தின் திறம்வியந்து கல்லோ ரெல்லாம் விருப்பமுடன் கிழக்குவங்கச் சுதந்தி ரப்போர் வெற்றிபெற இறையருளை வாழ்த்தக் கண்டோம்! 120

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பருவ_மழை.pdf/134&oldid=807255" இலிருந்து மீள்விக்கப்பட்டது