பக்கம்:பருவ மழை.pdf/21

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3 இதில் உள்ள கவிதைகள் சென்ற நாற்பது ஆண்டுகளில் பல்வேறு காலங்களில் பல்வேறு பத்திரிகைகளில் வெளி வந்தவையாகும். அதனிலும், சேமித்து வைக்கும் பழக்கம் இல்லாத காரணத்தால் எத்தனையோ கவிதைகள் கிடைக் காமற் போய் விட்டது. கிடைத்தவற்றுள் சிலவற்றை வழங்குகின்றேன். தீர்ப்பளிக்க வேண்டியது காலத்தின் கடன். இந்நூலுக்கு அரியதொரு முன்னுரை வழங்கிச் சிறப் பித்த மேலவைத் தலைவர் மாண்புமிகு சிலம்புச் செல்வர் ஐயா. ம. பொ. சி. அவர்களுக்கும், அணிந்துரை வழங்கிப் பெருமை சேர்த்த அருள்மொழி அரசு திருமுருக கிருபானந்தவாரியார் அவர்களுக்கும், பொறுப்போடும் பொறுமையோடும் வரிக்கு வரி படித்து ரசித்துக் கருத்துக்கள் நிறைந்ததொரு ஆய்வுரை நல்கிய எனது அரிய நண்பர். சிலம்பொலி. திரு. சு. செல்லப் பனர் அவர்களுக்கும், நூலை அழகுறத் தொகுத்தும், பிழை திருத்தியும் உதவிய முதுபெருங் கவிஞர். திரு. தே, ப. பெருமாள் அவர்களுக்கும் அச்சிட்டு வழங்கிய மூவேந்தர் அச்சக உரிமையாளர் திரு முத்து அவர்களுக்கும், எல்லாவற்றிற்கும் மேலாக இந்நூலைச் சிறப்பாக வெளியிட முன்வந்து மகிழ்ச்சியோடும் அன்போடும் செய லாற்றிச் சிறப்பித்த எனதன்பிற்குரிய வானதிபதிப்பக உரிமையாளர் திரு ஏ. திருநாவுக்கரசு அவர்களுக்கும் என்றென்றும் நன்றிக்குரியோனக இருப்பேனென்று கூறி முடிக்கின்றேன். அன்புள்ள கு. சா. கிருஷ்ணமூர்த்தி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பருவ_மழை.pdf/21&oldid=807501" இலிருந்து மீள்விக்கப்பட்டது