பக்கம்:பருவ மழை.pdf/222

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வாழ்க்கையில் சோகமென்னும் வடுக்களைத் தடுத்துக், கல்வி ஊக்கம்கல் உறுதி ஞானம் உயர்ப் பண்பு மகிழ்ச்சி ஓங்கி ஆக்கம் பெற்றிடத் தான் "அசோக'னென் றழைத்தேன்! அந்த நோக்கங்கள் அனைத்தையும் ஓர் நொடிக்குள்ளே தகர்த்து விட்டாய் ! மார்மேலும் தோளின்மேலும் மடிமேலும் வைத்து உன்னை சீராட்டி வளர்த்த தெல்லாம் சிந்தையில் அடுத் தடுத்துப் போராடும் அலைக ளென்னப் பொடிக்குதே என்னுள்ளத்தை யாரோடு எதனைச் சொல்லி அழுவேன் நான்வாழ்க்கையெல்லாம்! பள்ளியின் இறுதி யாண்டுப் படித்திடும் வரை வேற்காட்டில் தள்ளியே சிறையில் வைத்த தன்மைபோல் பிரிவால் நேர்ந்த உள்ளத்தின் துயரனைத்தும் ஒருவாறு மூடி வைத்தேன், தெள்ளிய கல்வி கற்றுத் தேர்விலும் வெற்றி பெற்ருய்! 210

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பருவ_மழை.pdf/222&oldid=807515" இலிருந்து மீள்விக்கப்பட்டது