இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
பூசைக்குப் புனித மென்று புதுமலர் மாலை யொன்று ஆசையாய்த் தொடுத்து வைத்தேன்! அதனையோர் குரங் கெடுத்து நாசமாய்ப் பிய்த்துப் போட்டு கசிந்திடச் செய்த தந்தோ! வேசுறு மனத்தி ைேடு வெதும்பியே வாடுகின்றேன்! கெஞ்சகக் காட்டில் அன்பின் நிதியென வைத்துக் காத்த அஞ்சுகக் கிளியே உன்னை - அந்தகன் என்னும் பூனை வஞ்சக மாய்க் கவர்ந்த வன்செயல் தன்னை எண்ணி விஞ்சிடுந் துயரின் வெம்மை விளம்பிடுந் தரத்த தாமே? ஏழைக் கவிஞன் உந்தன் ஏற்றத்திற்கேற்றவாறு வாழும் கிலேயளிக்க வாக்கில்லை யென்பதற்கோசூழும் வறுமையில்.நான் - சுட்டெரித் திட்டே னென்ருேபாழும் உலகில் என்னைப் பழிதீர்த்துக் கொண்டாயப்பா 226