பக்கம்:பருவ மழை.pdf/251

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தெய்வம் பொறுத் திருமோ? நேருவெனும் மாமேரு நிலைத்த இடம் தனகிரப்ப யாரினிமேல் இருக்கின்ருர்? என நினைத்த வேளையிலே பாரதத்தின் மக்கள்தவப் பயனுக லால்பகதூர்பேருரைத்துப், பிரதமராம் பெரும்பதவி தன்னில் வைத்தோம்! மூர்த்தி சிறிதெனவே முணுமுணுத்தோர் வாயடைக்கக் கீர்த்திமிகுஞ் செயலாற்றிக் கிளர்ந்தெழுந்த பாக்-சீன போர்த்திறத்தைப் புறங்கண்டுப் புனிதமிகு பெரும் புகழைச் சேர்த்துவைத்த சாஸ்திரியின் திறமைக் குவமை யுண்டோ? வையத்து காடனைத்தும் வஞ்சப் பகை யொழித்து உய்விக்கத் தாஷ்கண்டில் ஒப்பந்தம் செய்து கொண்ட மைஈரம் காயுமுன்னே மறலி எனும் கொடியோன் செய்த கொடுமைதன்னைத் தெய்வம் பொறுத்திடுமோ? செங்கோல் 16-1.66. 239

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பருவ_மழை.pdf/251&oldid=807557" இலிருந்து மீள்விக்கப்பட்டது