பக்கம்:பருவ மழை.pdf/282

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆசியாவின் ஜோதியென்று அகிலம் போற்றும் தலைவனை மாசில்லாத மனித குலத்தை வாழ வைக்கும் முதல்வனை நேசநாட்டின் உரிமைக்காக நீதிபேசும் துணைவனை கூசிடாமல் தூற்றிப் பேசும் கொள்கை கொண்ட முரடன -(சீனனை) பஞ்சசீலம் தன்னைக் காற்றில் பரக்க விட்ட அசடனை கொஞ்சமேனும் கெஞ்சில் நீதிக் கொள்கையற்ற கசடனை வஞ்சமாகப் போர்தொடுக்க வலுவில் வந்த அசுரனை வெஞ்சமர்க் களத்தில் வீழ்த்தி வெற்றி வாகை சூடுவோம் -(சீன&ன) உலககாட்டுச் சபையில் அமரும் யோக்யதை இல்லாதவன் ஊர்ந்து செல்லும்பூச்சிகள் புழுப் பாம்பை உண்டுக் களிப்பவன் கலகம் செய்து நாட்டைப்பிடிக்கக் கச்சை கட்டி வந்தவன் கனவை மாய்க்கத் துணிவு கொண்டு களப்புகுந்து வெல்லுவோம் -(ಕೆಕTಶಿಸr) 272

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பருவ_மழை.pdf/282&oldid=807699" இலிருந்து மீள்விக்கப்பட்டது