பக்கம்:பருவ மழை.pdf/300

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அலையெனத் திரண்டுவந்த ஆந்திரக்கூட்டம் - சென்னையை அடைவதற்கு ஆர்ப்பரித்துப் பார்த்ததே கோட்டம் தலையினைக் கொடுத்தும் நமது தலைநகர்க் காப்போம் - எனற தலைவன் ஆணை தன்னை ஏற்றுச் சென்னையை மீட்டோம் - (திருத்) உரிமைக் கெல்லை வேங்கடமென்று உறுதி - கொள்ளுவோம்-நமது உறவுக்கெல்லை இமயமென்ற உயர்வைச் சொல்லுவோம் அரசியல் சமஷ்ட்டி கானும் அகிலபாரதம்-தனிலோர் அங்கமென்ற பெருமையோடு, மகிழ்ச்சி கொள்ளுவோம் -(திருத்) வில் புலிமீன் விளங்கும் கொடியை விண்ணில் ஏற்றுவோம்-தமிழன் வீரமிக்கப் புகழை உலகம் எங்கும் சாற்றுவோம் அல்லல்மிக்க வறுமை ஒட்டிச் செழுமை கூட்டுவோம் - மக்கள் அமைதிகாணச் சமதர்மக் குடியாட்சி நாட்டுவோம் (திருத்) ('செங்கோல்” திருத்தணி வெற்றிவிழா மeர். 1956) 290

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பருவ_மழை.pdf/300&oldid=807724" இலிருந்து மீள்விக்கப்பட்டது