பக்கம்:பருவ மழை.pdf/310

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பல்லாண்ாரு வாழ்க! சத்தியமெய் ஞானியெனும் காந்தியண்ணல் சாத்விகப் போர்க்களத்தில் பயிற்சிபெற்ற உத்தமர்கள் பலராவர்; அவர்களுக்குள் ஒப்பற்ற தமிழகத்தின் தலைவரென்னும் முத்திரைபெற் றயராது பணிகளாற்றும் மூதறிஞர் ம. பொ. சி. தனக் கிங்காளில் முத்துவிழா வெனக்கேட்டென் னுள்ளமெல்லாம் மூவாத பேரமுதம் முகிழ்த்ததம்மா! எழுபத்தோ ராண்டுகளைத் தொட்டுகின்றும் இளைஞர்களும் வியப்படைய இடையருது இழிச்சொற்கள் பழிச்சொற்கள் எல்லாம்ஏற்றும் எதிரிகளின் சதிகளெல்லாம் முறியடித்தும் அழிவற்ற தமிழ்மொழிக்கு ஆக்கம்தேடி அரியணையில் அமர்த்துதற்கு அயர்வுருது வழிவகைகள் வகுத்துவரும் சிலம்புச்செல்வர் வாழ்வாங்கு வாழ்ந்திடுக பல்லாண்டிங்கே! 30 |

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பருவ_மழை.pdf/310&oldid=807735" இலிருந்து மீள்விக்கப்பட்டது