பக்கம்:பருவ மழை.pdf/313

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விடுதலைப்போர்ப் பரணிபாடி முரசுகொட்டி வீரமிகுவுணர்ச்சியுடனெழுச்சியூட்டி அடிமையிருட் கடியநெஞ்சக்கனலைமுட்டும் அமரகவி பாரதியின் கவிதைமுற்றும் அடகுபெற்றுத் தனியுடமை யாக்கிக்கொண்டு ஆதாய மடைந்துவந்த அநீதிமிக்கக் கொடுமைதனை நீக்குதற்குக் குரல்கொடுத்த குணக்குன்ரும் சண்முகத்தை வாழ்த்துகின்றேன்! மனசாட்சி வழிநடக்கும் மாண்புமிக்கான்! மாற்றலரும் போற்றுகின்ற ஆற்றல்மிக்கான்! இனிதாகப் பேசுகின்ற இயல்புமிக்கான்! இலக்கியத்திற் கலக்கமற்ற தெளிவுமிக்கான் வினையாற்றுங் கடமையிலே விழிப்புமிக்கான்! விண்முட்டும் புகழ்குவித்து ஒளவைகாமம் தனதாக்கிக் கொண்ட தி. க. சண்முகத்தைத் தமிழ்நாடகக் கலையின் தவப்பேறென்பேன்: காடகா சிரியர்பலர் தோன்றச் செய்தான்! கடிகைகடி கர்பலரைத் தோற்றுவித்தான்! பாடல்புனை வோர்பலரை ஊக்குவித்தான்! படத்துறையில் இயக்குநர்கள் பலரைச்சேர்த்தான்' காடகத்தால் வளர்ந்தோர்க ளதை மறந்து கலிய விட்டார் திரையுலகக் கவர்ச்சியாலே கேடிதனை விலக்கிடகன் முயற்சிகானும் கீர்த்திமிகு சண்முகத்தை வாழ்த்துகின்றேன்! 304

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பருவ_மழை.pdf/313&oldid=807738" இலிருந்து மீள்விக்கப்பட்டது