பக்கம்:பருவ மழை.pdf/37

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இளந்தமிழா ! AMSAASAASAASAASAAASJMSMMAMMAMSMSMSMAAA AAAA AAAA AAAA AAAASAAA AAAA AAAA AAAA AAAA AAAA AAAA AAAAS AAAAA AAAA SAAAS AAAAA AAAA AAAAS AAASASASS இளந்தமிழா உந்தனது சிந்த னைக்கு எந்தனது விண்ணப்பம் ஒன்று கேளாய்! வளம்மிகுந்து வாழ்ந்தவர்கள் தமிழ ரென்று வரலாற்றில் படிப்பதல்லால் தமிழ ரிைன்று களம்புகுந்து தன்னினத்தின் மானம் தன்னை காப்பாற்றும் திறமையற்ற னெனும்சொற் கேட்டேன் உளம் நொறுங்கிப் போகுதடா! உன்ன லன்றி உயர்நிலையைக் காண்பதற்கு எவரா லாகும்? பெருந்தலைகள் தமிழினத்தின் உரிமை தன்னைப் பேணுமென்ற நம்பிக்கை யற்றுப் போச்சு! கிரந்தரமாய் அவரவர்தம் தன்ன லத்தை நினைப்பதன்றிப் பொதுநலத்தை நினைப்பாரில்லை: வரம்பிகந்த பிற்போக்குச் சமுதா யத்தை வகைபடுத்தி முன்னேற்றங் காண வேண்டின் உரம்மிகுந்த இளந்தமிழன் உணர்ச்சி பொங்கி உருவாக்கும் புரட்சிவழி ஒன்று தேவை! 20

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பருவ_மழை.pdf/37&oldid=807753" இலிருந்து மீள்விக்கப்பட்டது