இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
கதிருடன் பிறந்த கழகம் !
- へヘへへヘヘ*ヘヘヘヘー、ヘべへヘヘヘーヘヘヘへヘヘヘヘヘヘ
ஆயிரத்துத் தொள்ளாயிரத்தி நாற்பத் தேழாம் ஆண்டினிலே தைத்திங்கள் முதல்நாளன்று மாயிருளைக் கிழித்துத்தமிழ் இனத்தின் வாழ்வு மாண்புறவே கீழ்த்திசையில் உதித்தெழுந்த ஞாயிறுடன் தமிழரசுக் கழகம்' சேர்ந்து ஞாலமிசைப் பிறந்ததென நல்லோர் வாழ்த்தும் சேயினுக்கு இன்றுபதினெட்டாம் ஆண்டு சென்றதினி வாலிபத்தின் செருக்கைக் காண்போம்! தேசத்தின் விடுதலைக்குப் பின்னே நந்தம் செந்தமிழர் இனமும்அந்தச் சுதந்தி ரத்தின் மாசற்ற பெரும்பயனை அடைவதற்கு மாண்புயர்ந்த வழிமுறைகள் வகுத்துக் காட்டும் சாஸனமாய்த் தமிழன் குரல் தன்னைத் தந்து தமிழ்மொழியும் தமிழ்கிலமும் தமிழர் வாழ்வும் தேசுற்று மேன்மையுறச் செயல்க ளாற்றும் தேசியத் தமிழரசுக் கழகம் வாழ்க! 29