பக்கம்:பருவ மழை.pdf/70

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஏவுகணை களே எண்ணிலா வகையில் ஆவலாய்ச் செய்தும் அடுக்கிக் குவித்தும் உலகின் உயிர்க்குலம் உள்ளம் கடுக்குற கலகம் விளைத்திடக் கச்சையைக் கட்டியும் பேய்க்குணம் மிகுத்திடும் போர்த்திறன் வளர்த்திடும் தீய்ச்செயல் பெருக்கிடும் தேயத்தார் மத்தியில் இளையகம் பாரதம் இயற்றிடும் அரசியல் விளைவெலாம் கண்டு வியப்புறும் உலகமே! எங்கெங்கு தீமைகள் எவர்க்கு யார்விளக்கினும் அங்கெலாம் நம்குரல் அநீதியை எதிர்த்திடும்! தீமை விளைப்பவர் திண்ணிய ராயினும் நாமதற் கஞ்சிடோம் நடுநிலை மாறிடோம்! புத்தரும் காந்தியும் புனிதப் படுத்திய சத்திய நெறிவழி தவறிநாம் நடந்திடோம்! இமையா காட்டமும், இரும்புநேர் நெஞ்சமும் அமைந்தகற் பாரதம் அமைதியைக் காத்திடும்! 53

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பருவ_மழை.pdf/70&oldid=807792" இலிருந்து மீள்விக்கப்பட்டது