பக்கம்:பருவ மழை.pdf/82

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செயலில் அயர்ந்திடோம் AJJAASAMMSJAJJJSAJJJMMAMAMAMAAAS AAAAA AAAAA இந்திய நாட்டினர்க்கு இன்பச் சுதந்திரம் வந்ததை வாழ்த்தினுேம் வண்டமிழ் இனத்திற்கும் அந்தச் சுதந்திர அருள்ஒளி பரவிடச் சிந்தனை செய்தோம்; திட்டங்கள் திட்டினுேம்! இளங்கோ, வள்ளுவன் இலக்கிய நெ றிவழிக் களங்கமில் தமிழரசுக் கழகமும் கண்டனம்! தலைநகர் காத்தோம் தமிழையும் காத்தோம்! மலையெனப் பெரும்புகழ் வானுறச் சேர்த்தோம்! செந்தமிழ் எல்லையைத் தெற்கிலும் வடக்கிலும் சொந்தமாய்க் கவர்ந்தவர் சூழ்ச்சியை வென்ருேம்: அன்றுதொட் டின்றுவரை அடுத்துப் பலப்பல வென்றியை யன்றியோர் வீழ்ச்சியைக் கண்டிலம்: குன்றுயர் தோளினர்! கொள்கை மறவர்கள்! என்றும் தளர்ந்திடா இதயம் படைத்தவர்! ஆயிரம் ஆயிரம் அன்புளத் தொண்டர்கம் பாயிரம் பாடிடப் பாட்டொன்று போதுமோ? இத்தகு வீரர்தம் இணையிலாத் தலைவன்! யுக்தியும் திறமும் ஒழுக்கமும் மிக்கவன்! அன்பும் அறமும் அருளும் அறிவுப் பண்பும் தெளிவும் பரிவும் நிறையும் 65

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பருவ_மழை.pdf/82&oldid=807805" இலிருந்து மீள்விக்கப்பட்டது