பக்கம்:பர்மாவில் பெரியார்.pdf/10

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

8

இன்றைய இளைஞர்களுக்கு இப் புத்தகத்தை என் அன்புப் படைப்பாக அளிக்கிறேன்.

நடிப்பு உலகத்தை ஆராதிப்பதை விட்டு அவர்கள் நேரான பாதைக்கு வர வேண்டும்!

தன்னலம் வளர்க்கும் பக்திக் குழுக்களை விட்டு அவர்கள் இலட்சியப் பாதைக்குத் திரும்ப வேண்டும்.

இளமைப் பருவத்தினைத் திசை திருப்பி - கவர்ச்சி மயக்கம் காட்டும் பத்திரிகைகள், புத்தகங்கள் ஆகியவற்றைப் படிக்கும் பாழான பழக்கத்திலிருந்து அவர்கள் விடுதலை பெற வேண்டும்.

காந்தியடிகள், டாக்டர் அம்பேத்கார், நேரு, நேதாஜி, சிங்காரவேலர், கோரா, பெரியார், காமராசர், பாரதியார், நாவலர் பாரதியார், அண்ணா, மறைமலையடிகள், திரு.வி.க., குருசாமி போன்ற இலட்சியவாதிகளின் வரலாறுகளைப் படிக்க வேண்டும். நாட்டுக்காக நாட்டு மக்களுக்காகச் சிந்தித்துச் செயல்பட்ட அந்த மாமேதைகளின் அடிச்சுவட்டைப் பின்பற்றி இலட்சியப் பாட்டையில் நடை போட வேண்டும்.

அந்தச் செவ்விய முயற்சியில் இளைஞர்களைத் திருப்பும் துாண்டு கோலாக இந்தப் புத்தகம் அமையுமென்றால், அதுவே எனக்குக் கிடைக்கும் பெரும் பரிசாகக் கருதி நான் மிகுந்த மகிழ்ச்சியடைவேன்.

அன்புள்ள,
நாரா நாச்சியப்பன்