பக்கம்:பர்மாவில் பெரியார்.pdf/42

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

40

பர்மாவில் பெரியார்

அக்கரையில் அன்றைய கூட்டம் சர்க்கிள் இன்ஸ்பெக்டர் ஊராமா தலைமையில் நடந்தது. நானும் சில தோழர்களும் பேசியபின் பெரியார் சிறப்புச் சொற்பொழிவு நிகழ்த்தினார்.

இன்றைய மதவெறியாளர்களின் சூழ்ச்சிகளை முறியடித்துப் பெரியாரைப் பேச அழைத்து வந்தோம். அவரோ பெருவாரியான மக்களை அழுத்தி வைத்திருக்கும் வருணா சிரம தருமத்தை வகுத்த மனுநீதியின் சூழ்ச்சிகளையும் வேத புராணங்களின் சூழ்ச்சிகளையும் விளக்கிப் பேசினார்.

தொடர்ந்து கூட்டங்கள் நடந்தன. 'ரசிக ரஞ்சனி' கும்பல், தங்கள் சூழ்ச்சி பலிக்காததை எண்ணிப் புழுங்கியது.

அந்தப் புழுக்கத்தின் காரணமாகத் தொடர்ந்து பெரியார் கூட்ட நிகழ்ச்சிகளை மதக் கலவரத்தைத் துாண்டும் பேச்சுக்களாக வருணித்துச் செய்திகளைத் திரித்து வெளியிட்டு வந்தது.