பக்கம்:பல்லவப் பேரரசர்.pdf/17

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

டாக்டர் மா.இராசமாணிக்கனார்

15



இம்மூன்று பட்டயச் செய்திகளைத் தவிர இப் பல்லவரைப் பற்றிக் கூறத்தக்க வேறு சான்றுகள் இல்லை. ஆதலால் இவர்களது அரச முறை-வரலாறு இன்ன பிறவும் முறையாகக் கூறமுடியவில்லை.

இடைக்காலப் பல்லவர்
(கி.பி. 340-600)

இக்காலப் பல்லவர் தங்கள் பட்டயங்களை வடமொழியில் வெளியிட்டனர். இவர்களுக்கும் முன் சொன்ன பல்லவர்க்கும் என்ன உறவு என்பது தெரியவில்லை. இவர்கள் வெளியிட்ட பட்டயங்களைக் கொண்டு கீழ்வரும் பெயர்களையுடையவர் இக்காலத்தவராகக் கூறலாம்.

குமார விஷ்ணு I
ஸ்கந்தவர்மன் I
விரகூர்ச்சவர்மன்
ஸ்கந்தவர்மன் II
(இவன் மக்கள் மூவர்)
சிம்மவீர்மன் I இளவரசன்
விஷ்ணுகோபன்
குமாரவிஷ்ணு II
ஸ்கந்தவர்மன் III சிம்மவர்மன் II புத்தவர்மன்
நந்திவர்மன் I விஷ்ணுகோபவர்மன் குமாரவிஷ்ணு III
சிம்மவர்மன் III
சிம்மவிஷ்ணு
(இவன் தம்பி பீமவர்மன்)