பக்கம்:பல்லவப் பேரரசர்.pdf/82

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

80

பல்லவப் பேரரசர்



கங்கைக் கரைக் காட்சி

இஃது ‘அர்ச்சுனன் தவம்’ எனத் தவறாகக் கூறப்படுகிறது. இங்குள்ள காட்சிகளுள் குறிப்பிடத்தக்கவை ஆறு, அதன் நடுவில் நாகர் நீராடுதல் - மறையவன் ஒருவன் தண்ணிரை ஆற்றில் முகந்து செல்லல் - மான்.ஒன்று நீர் அருந்த ஆற்றண்டை வருதல் - ஆற்றுக்கு மேற்புறம் இரண்டு.அன்னப் பறவைகள் நீராட நிற்றல் - கீழ்ப்புறம் உள்ள பெருமாள் கோவிலைச் சுற்றித் தவத்தவர் பலர் இருத்தல் - இத்தவமுனிவரைக் கண்டு பூனை ஒன்று பின் கால்கள் மீது நின்று முன்கால்களைத் தலைக்கு மேல் சேர்த்து யோக நிலையில் நிற்றல் - அதனைக் கண்ட எலிகள் அச்சம் நீங்கி மரியாதையோடுஅதனைப் பணிதல் என்பன. இக்காட்சிகள் கண்ணைக் கவரத் தக்கவையாகும். இவை இமயமலை அடிவாரத்தில் கங்கைக்கரைக் காட்சிகள் என்பது அறிஞர் கருத்து. பூனை தவம் செய்தலைக் காட்டிக் காண்பார்க்கு நகைச்சுவை ஊட்டிய சிற்பிகளின் நுண்மதி பாராட்டற் பாலதன்றோ?

விருதுப் பெயர்கள்

நரசிம்மன் இங்ஙனம் அமைத்த குகைக் கோவில்களிலும் ஒற்றைக்கல் கோவில்களிலும் தன் - விருதுப்பெயர்களை வெட்டுவித்திான். அவற்றுள் குறிக்கத் தக்கவை. மஹாமல்லன், ரீபரன், ரீமேகன், பூரீநிதி, இரணஜயன், அத்தியந்தகாமன், அமேயமாயன், நயநாங்குரன் என்பனவாகும்.