பக்கம்:பல்லவர் வரலாறு.pdf/117

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மகேந்திரவர்மன்

97



இருக்கிறது. இடப்புறமுள்ள வாயில் காவலர் வணக்கம் தெரிவிப்பவர் போல ஒரு கையைத் தலைக்குச் சரியாகத் தூக்கி நிற்கின்றனர். வலப்புறக் காவலர் தடிமீது கைவைத்து நிற்கின்றனர். உள்ளறையில் லிங்கம் இருக்கின்றது.

துரண்கள் மகேந்திரவாடியில் உள்ளவற்றை ஒத்துள்ளன. தூண்கள்மீது ஒருவகைத் தோரணம் செதுக்கப்பட்டுள்ளது. அது ‘திருவாசி’ எனப்படும். அஃது இருபக்கங்களிலும் உள்ள மகர மீன்களின் வாய்களிலிருந்து கிளம்பி நடுவில் உள்ள ஒரு சிறிய மேடையில் கலக்கின்றது. அம் மேடைமீது சிறிய இசைவாணர் (கந்தவர்வர்) இருக்கின்றனர்; மகரமீன்கள் கழுத்துமீதும் இசைவாணர் இருக்கின்றனர். திருவாசியில் இரண்டு வளைவுகள் இருக்கின்றன. அவற்றால் அஃது ‘இரட்டைத் திருவாசி’ எனப்படும். இங்குள்ள கல்வெட்டில் ஒரு பகுதி தமிழ்ப் பாட்டு; மற்றது வடமொழிப் பாட்டு. கோவில் உள்ள இடம் அக் காலத்தில் ‘வெண்பட்டு’ எனப்பட்டது போலும்!

(7) சீயமங்கலம்

இது வடஆர்க்காட்டுக் கோட்டத்தில் வந்தவாசிக் கூற்றத்தில் தேசூருக்கு ஒரு கல்தெற்கே இருக்கின்றது. இது சிம்ம மங்கலம், அஃதாவது சிம்மவிஷ்ணு ‘சதுர்வேதி மங்கலம்’ என்னும் பெயர் பெற்றிருந்திருக்க வேண்டும். அது மருவிச் ‘சீயமங்கலம்’ ஆயிற்றென்னலாம். இங்குள்ள கோவில், பல இருட்டறைகளைத் தாண்டி அப்பால் இருக்கிறது. இங்குள்ள தூணில், “அவனிபாஜனப் பல்லவேஸ்வரம் என்னும் இக் கோவில், லளிதாங்குரன் என்னும் காவலனால் குடையப்பட்டது,” என்னும் கல்வெட்டுக் காணப்படுகிறது. உள்ளறைலிங்கமும் வாயிற்காவலர் உருவங்களும் வல்லத்தில் இருப்பனபோன்றே அமைந்துள்ளன. இக் குகையின் இரு பக்கங்களிலும் சில சிலைகள் காணப்படுகின்றன. அவை இருக்கும் மாடங்களின் உச்சியில் ‘இரட்டைத் திருவாசி’ என்னும் தோரணங்கள் செதுக்கப்பட்டுள்ளன.