பக்கம்:பல்லவர் வரலாறு.pdf/328

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

308

பல்லவர் வரலாறு



“வெங்கட் பொருகயல்சேர் வெல்கொடியோன் வாள்மாறன்
செங்கட் கரும்பகடு சென்றுழக்க-வங்குலந்தார்
தேரழுந்தி மாவழுந்தச் செங்குருதி மண்பரந்த
ஊரழுந்தி யூ ரென்னு மூர்.”

(2) ஆசாரியர் அநிருத்தர்

இவர் ‘ஆசாரியர்’ என்பதால், முத்தரையற்கு ஆசிரியராகவேனும், சமண முனிவருள் ஒருவராகவேனும் விளங்கியவராவர் என்று நினைக்கலாம். இவர் பாடியது கட்டளைக் கலித்துறை, அது சிதைந்து காணப்படுகிறது.

“..............
...போலரசு பிறவா பிறநெடு மேருநெற்றிப்
பொன்போல் பசுங்க திர்ஆயிரம் (விசும்) பொற்றேர்ப்பருதிக்
கெண்டோ தரவிடு மோவினைச் சோதி யிருவிசும்பே.”

(3) கோட்டாற்று இளம்பெருமானார்

‘கோட்டாறு’ என்பது தென் திருவாங்கூர்ச் சீமையில் இருப்பது. இவர் அவ்வூரினர். இவர் இளம்பெருமானார் எனப்பட்டதால் இவர் தமையனார் “கோட்டாற்றுப் பெருமானார்” என்ற ஒருவர் இருந்திருத்தல் வேண்டும் என்பது தெரிகிறது. இவரது பாடலும் சிதைந்து காணப்படுகிறது.

“சேட்டினர் பூந்தண் பொழிற்செம்பொன் மாரிக்கடியரணம்
முட்டினசீற்றமுன் சென்றது பின்பு பகட்டினத் தோர்
கெ.. (மர்) மாறன்க(டி)........க்க”

(4) குவாவங் காஞ்சன்

இவரது முழுப்பெயர் ‘கிழார்க் கூற்றத்துப் பவதாய மங்கலத்து அமருணிலை ஆயின குவாவங் காஞ்சன்’ என்பது. ‘கிழார்க் கூற்றம்’ என்பது தஞ்சைக் கோட்டத்துப் பாபநாசத்தைச் சுற்றியுள்ள பகுதியாகும். ‘அமருள் நிலை’ என்பது இவர் படைத்தலைவர்