இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
29
மெல்லத் தத்தித் தத்தி நடத்தது.
சிறிது தொலை சென்று திரும்பிப் பார்த்தது.
கிழவன் குறட்டை விட்டுக் கொண்டிருந்தான்.
மேலும் நடந்தது. தத்தித்தத்திச் சென்றது: கிழவன் கண்ணுக்குத் தென்படாத தொலைவு சென்றுவிட்டது.
ஒரு தோட்டத்துக்குள் நுழைந்தது.
‘அப்பா! விடுதலையாகி விட்டோம்’ என்று தலை நிமிர்ந்தது.
ஒரு பூனை அதையே உற்றுப் பார்த்தது. பயமாய் இருந்தது.
சிட்டுக் குருவி சுற்றும் முற்றும் பார்த்தது. சிறிது தொலைவில் ஒரு கிணறு இருந்தது. அதற்குப் பக்கத்தில் ஒரு குடம் கவிழ்ந்து கிடந்தது.
சட்டென்று தத்தித் தத்திச் சென்று அந்தக் குடத்திற்குள் நுழைந்து கொண்டது.
பூனைபாய்ந்து வந்தது. அது பிடிப்பதற்கு முன் குருவி குடத்திற்குள் நுழைந்துவிட்டது.