பக்கம்:பள்ளிக்குச் சென்ற சிட்டுக்குருவிகள்.pdf/37

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

35


சிட்டுக்கள் எவ்வளவோ சொல்லியும் அதன் மனக் கவலை மாறவில்லை.

ஒருநாள் கடற்கரையில் ஒரு சிறு பெண், தேங்காய்மாங்காய் சுண்டல் பொட்டலத்தைக் கைதவறிப் போட்டு விட்டாள். மண்ணில் விழுந்ததை எடுக்க வேண்டாம் என்று அதன் பெற்றோர் அதற்கு வேறு பொட்டலம் வாங்கிக் கொடுத்தார்கள். அவர்கள் அந்த இடத்தை விட்டு அகன்றபின் சிட்டுக் குருவிகள் அந்தச் சுண்டல்களைக் கொத்தித் தின்றன.

கவலையோடு இருந்த அந்தச் சிட்டுக் குருவி ஒன்றும் தின்னப் பிடிக்காமல் தொலைவில் நின்றுகொண்டிருந்தது. அந்தப்பொட்டலம் கட்டியிருந்த தாள் காற்றில் பறந்து வந்தது. அந்தத் தாள் கவலையோடு நின்ற சிட்டுக் குருவியின் முன் பறந்து சென்று விழுந்தது.

சிட்டுக்குருவி அந்தத் தாளை உற்று நோக்கியது. அந்தத் தாளில் கொட்டை எழுத்தில் ஒரு செய்தி வெளியாகியிருந்தது.

சிட்டுக் குருவி அதைப் படித்தது "நேற்றுக் கூடிய சட்டமன்றக் கூட்டத்தில் பல புதிய சட்டங்கள் நிறைவேறின. அவற்றில்