பக்கம்:பள்ளிக்குச் சென்ற சிட்டுக்குருவிகள்.pdf/7

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

1

பள்ளிக்குச் சென்ற சிட்டுக் குருவிகள்


ஆழ்வார்ப்பேட்டையில் பேருந்து நிற்கும் இடத்தில் ஓர் அரசமரம் இருக்கிறது. அந்த மரக்கிளை ஒன்றில் கூடுகட்டிக் கொண்டு இரண்டு சிட்டுக் குருவிகள் இருந்தன. அந்தச் சிட்டுக் குருவிகளுக்கு இரண்டு சின்னச் சிட்டுக்கள் இருந்தன. அந்தச் சின்னச் சிட்டுகள் இரண்டும் அடித்த கொட்டத்திற்கு அளவே இல்லை.

ஒரு சிட்டுக்குஞ்சு ஒரு கிளையில் போய் ஒளிந்து கொள்ளும். இன்னொன்று அதைத் தேடிக்கொண்டு மரத்தைச் சுற்றிச் சுற்றிவரும். அது சோர்ந்து போய் ஒரு கிளையில் உட்கார வரும். அப்பொழுது பார்த்து முதல் குஞ்சு விருட்டென்று பறக்கும். உடனே அதை விரட் டிக்கொண்டு இரண்டாவது குஞ்சு புறப்படும்.