இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
125
. . . . . . .பழங்கதைகளும் பழமொழிகளும்
திரிபுரி | தமிழ் | விளக்கம் |
1. வட்டாய் கராய் ப்ரேங் காகா
மழை இல்லை; இடி உண்டு; |
மழை இல்லாதபோது இடி இடிக்கும். | பயனில்லாத படாடோபப் பேச்சுக்கு இது ஓர் உவமை. ஒரே உவமைப் பொருட்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. |
2. காக் கடார் சனாய் லங் கானி ராஜா
பெரிய வார்த்தைகள் பேசுபவன் இலங்கை ராஜா |
குரைக்கிற நாய்கடிக்காது. | The dog that barks does not bite பெரிய பேச்சு பேசுகிறவன் ஒரு காரியமும் செய்ய மாட்டான் என்பது பொருள். |
3. அதி தக்க பான்மிலிகியா
அதிக எண்ணெய் பளபளப்பு தராது |
அளவுக்கு மிஞ்சினால் அமுதமும் விஷம் | வாழ்க்கையில் எதிலும் மிதமிஞ்சி ஈடுபடக்கூடாது எனும் அறிவுரை இவற்றில் அடங்கியிருக்கிறது. |
4. அதி குலுங்கனி ததல் பராக்
அதிக சலாம் போடுகிறவன் பொய்யன் |
- | - |
5. சொடராக் குபாங் பகாலி சாகியா
அதிக ஆட்கள் குறைந்த மரச் சட்டங்கள் செய்தார்கள் |
கண்ணுகளாச் சேர்ந்து களம் பறிச்சாற்போல ஊர் கூடி செக்குத் தள்ளினாற் போல | அதிக ஆட்கள் வேலைசெய்து அறுவடையைக் கெடுத்ததுபோல் அல்லது ஊர் கூடி செக்கிழுத்ததைப் போல் Too many cooks spoil the broth. |
6. புரைராக் குலங்னலியா முனியா
பல பெண்கள் சணல் கொதிக்கவைத்து சில மரச்சட்டங்கள் செய்தாற்போல |
௸ பழமொழி |