பக்கம்:பழங்கதைகளும், பழமொழிகளும்.pdf/16

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உலகப் படைப்புக் கதைமூலங்கள் ஒர் ஆய்வு @_ லகம் படைக்கப்பட்ட விதம் பற்றி வரலாற்று முற்கால மக்கள் "பல கதைகளைப் படைத்திருக்கிறார்கள். அவற்றுள் இருவிதமானவற்றை வேறுபடுத்திக் காணலாம். உலகைப் படைத்தது தாய்தான். அவளை உலக மாதாவாகக் கருதி படைக்கப்பட்ட கதைகள் ஒரு விதம். உலகைப்படைத்தது தந்தைதான். அவர் உலகப்பிதா என்று கருதிப் படைக்கப்பட்ட கதைகள் இன்னொருவிதம். சில கதைகளில் தாய் கடலையும், வானையும் படைத்தாள் என்றும், பூமியையும், ஜீவராசியையும் அவளுடைய வழித்தோன்றலான ஒரு ஆண்மகன் படைத்தானென்றும் கூறப்படுகிறது. இவை யாவும் நாகரிக முற்கால மக்களின் வாய்வழிக் கதைகள். இவற்றை எழுத்துத் தோன்றிய பின்னர் தனிக்கதைகளாகவும், காப்பியங்களின் பகுதிகளாகவும், சமய நூல்களின் பகுதிகளாகவும் ஆக்கிவிட்டார்கள். இவற்றுள் பழைமையானவை பாபிலோனிய சுமேரியக் கதைகள், கிரேக்கக் கதைகள், யூதர்களது கதைகள், ஆரியர்களது வேதப் புராணக் கதைகள் முதலியன. இக்கதைகள் தோன்றிய சமுதாயச் சூழல்களை அகழ்வாராய்ச்சி, மானிடவியல் ஆய்வுகள் மூலம் கண்டுபிடித்து இக்கதைகளை உருவாக்கிய மக்களின் பண்பாட்டு நிலைகளிலிருந்து அக்கதைகள் எவ்வாறு உருவாயின என்பதை நாம் காண வேண்டும். உலகைப் படைத்தது யார்? இக்கேள்வியை வரலாற்று முற்காலத்திலும் நாகரிகத் துவக்க காலத்திலும் வாழ்ந்த மக்கள்