பக்கம்:பழங்கதைகளும், பழமொழிகளும்.pdf/24

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

శిఖీ 11 • • • • • • • • • • • • • • • • • • • • • • • • • • ه قrtifItBERGERکfigaققة .ggiff - ಇಣ இயா இதனையெல்லாம் அறிந்தான். தன் தந்தை அன்ஷாரிடம் சென்று, "நமது தாய் தியாமத் நம் மீது கோபங் கொண்டுள்ளாள். தேவர்களை அவள் தன்னோடு சேர்த்துக்கொண்டதோடு தான் படைத்த உயிர்களையும் நம் மீது ஏவிவிட்டிருக்கிறாள். நீங்கள் அப்ஸ்லிவையும், மும்முவையும் அழித்துவிட்டீர்கள். இப்பொழுது நம்மையெல்லாம் அழிக்க கிங்குவை உலகத் தலைவனாக நியமித்திருக்கிறாள். தியாமத்தை எதிர்க்க யாருமில்லை” என்றான். அவள் கோபத்தைத் தணித்து வரும்படி அவன் முதன்முதலில் 'அணு'வை அனுப்பினான். அனு தியாமத்தின் உலகிற்குப் போய் அவளைப் பார்க்க அஞ்சித் திரும்பிவிட்டான். பின்னர் இயா சென்றான். அவனும் அஞ்சித் திரும்பிவிட்டான். பின், அன்ஷார் இயாவின் மகன் மொரோடாக்கை அழைத்து, ‘என் அன்பிற்குரிய மகனே நீ போருக்குப் போ. உன்னை யாராலும் ஜெயிக்க முடியாது” என்றான். “தங்கள் கட்டளைப்படியே நடக்கிறேன். எந்த மனிதன் தங்களைப் போருக்கு அழைக்கிறான்?” என்று அவன் கேட்டான். “மனிதனல்ல. தியாமத் என்னும் பெண் நம்மை போருக்கு அழைக்கிறாள். பயப்படாதே. தியாமத்தின் மண்டையை நீ உடைப்பாய். மந்திரத்தால் நீ அவள் மீது வெற்றி கொள்வாய். அவசரமாகப் புறப்படு. அவளால் உன்னை காயப்படுத்த முடியாது. நீ திரும்பி வருவாய். போய் வா” என்று அன்ஷார் கூறினான். மொரோடாக், தேவர் மகாசபையைக் (உப்ஷினாகு) கூட்டினான். அவர்களும் அன்ஷாரின் விருப்பத்தை ஆதரித்தால், தானே தேவ சேனாபதியாக தியாமத் மீது படையெடுத்துச் செல்வதாகக் கூறினான், அவர்கள் மொரோடாக்கைத் தங்களது தலைவனாகவும், தேவ சேனாபதியாகவும் நியமித்தனர். அவர்கள் கூறியதாவது “விண்ணவர் அனைவரினும் நீ மேலானவன். உன்னுடைய கட்டளை அனு'வின் கட்டளையாகும். தேவர்களைப் பதவியில் உயர்த்தவும், தாழ்த்தவும் உனக்கு அதிகாரம் உண்டு. உன்னுடைய அதிகாரத்திற்கு எதிராகத் தேவர்களாகிய நாங்கள் எதுவும் செய்ய மாட்டோம். இப்பிரபஞ்ச முழுவதையும் ஆளும் உரிமையை உனக்கு