பக்கம்:பழங்கதைகளும், பழமொழிகளும்.pdf/26

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ജ് jVI. £;£ÍtÍMÍÍÍ£H$ú • • • • • • • • • • • • • • • • • • • • . . . . . . . 13 ಇಣ எய்தான். அது அவள் வயிற்றைக் கிழித்து, இதயத்தையும் துண்டாக்கியது. தியாமத் இறந்துபோனாள். அவளுடைய படைகள் சிதறியோடின. மொரோடாக் இறந்துபோன கிங்குவிடமிருந்து விதி ஒட்டை எடுத்துக்கொண்டான். அவன் தியாமத்தின் மண்டையை உடைத்து அவளுடைய இரத்தம் பூமியில் படாதபடி காற்றினால் மறைவிடங்களுக்குக் கொண்டு செல்லச்செய்தான். அவளுடைய உடலை இரு பகுதிகளாக வெட்டி, ஒரு பகுதியைப் பூமியாகவும் மற்றோர் பகுதியை வானமாகவும் படைத்தான். தேவர்களுக்குப் பதவிகள் அளித்து அவர்களைப் பதவியில் அமர்த்தினான். ஒவ்வொரு நூலுக்கும் ஒரு தேவனை அதி தேவதையாக்கினான். சந்திரனை நாட்களை அளக்கும்படி நியமித்தான். அவனது தந்தை இயாமனிதன் உலகில் தோன்றவேண்டும் என்று எண்ணினான். இதையறிந்து மொரோடாக் அவனிடம் கூறினான்: “எனது இரத்தத்தைச் சிந்தி எலும்பை உண்டாக்குவேன். இவ்வுலகை நிரப்ப மனிதனைப் படைப்பேன். தேவர்களை வணங்கவும் அவர்களுக்குக் கோவிலைக் கட்டவும் மனிதன் தேவையல்லவா?”. வேறோர் கதையில் சிப்பார் என்னும் தேவர்களின் அரசி மொரோடாக்கோடு சேர்ந்து மனிதனது விதையைப்படைத்தாள் என்று கூறப்பட்டுள்ளது. ஏழாவது சாசன ஒட்டில் அவன் ஐம்பத்தொரு பெயர்களால் தேவதேவன் என்றழைக்கப்படுகிறான். எல்லாத் தேவதைகளும் மொரோடாக்கின் அம்சமென அப்பகுதி கூறுகிறது. கமேரிய படைப்புக் கதை: இக்கதைக்கு முன்னர் சுமேரியக் கதையொன்றிருந்தது என்று சுமேரிய நாட்டுக் கதைகளை ஆராய்ந்த ஆய்வாளர்கள் கூறுகின்றனர். அதன் சுருக்கம் வருமாறு: “காடுகளிலும், கடலிலும், பயங்கர ராட்சஸ் மனித விலங்குகள் வாழ்ந்தன. அவை மலையில் வாழ்ந்த வீரர்களுடன் பகைமை கொண்டிருந்தன. வீரர்களின் மன்னனான இயா மனிதர்களின் விரோதிகளான இவ்விலங்குக் கூட்டத்தின் மீது படையெடுத்துச் சென்று, அவற்றின் தலைவனான அப்ஸஇவையும், அவன் மகனான