பக்கம்:பழங்கதைகளும், பழமொழிகளும்.pdf/47

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

കി பழங்கதைகளும் பழமொழிகளும் ** ه عاع هم ه . به هم ه . . 3 গুঞ্জ தந்தை வழி அல்லது தாய்வழி உரிமைகள் எவ்வாறு தோன்றுகின்றன என்பது பற்றி பல சமூகவியல் அறிஞர்கள் விளக்கியுள்ளனர். அவர்களுள் தாம்ஸன் கூறுவதை இங்கே கவனிப்போம். “ஈட்டி கண்டுபிடிக்கப்பட்ட பின் வேட்டையாடுதல் ஆண்களின் தொழிலாயிற்று. பெண்கள் உணவு சேகரிக்கும் செயலில் தொடர்ந்து ஈடுபட்டு வந்தனர். இவ்வாறு ஆண் - பெண் பாலாரிடையே வேலைப் பிரிவினை இருந்து வருவதை எல்லா வேட்டைச் சமுதாயத்தினரிடையேயும் இன்றும் காணலாம். பெண்கள் கருவுற்றிருக்கும் காலத்தில் அலைய முடியாததால் இயற்கையிலேயே இத்தகைய வேலைப் பிரிவினை ஏற்பட்டது. வேட்டையிலிருந்து விலங்குகளைப் பழக்கி வளர்க்கும் தொழில் தோன்றியது. வேட்டையில் கொல்லுவதற்குப் பதில் விலங்குகளைப் பிடித்துக் கொணர்ந்து வளர்த்தார்கள். ஆடு மாடு வளர்த்தல், வேட்டையாடுதல் ஆண்களின் தொழில்களாகவே இருக்கின்றன. உணவு தேடுதலிலிருந்து, குடியிருப்பின் அருகில் விதைத்துப் பயிரிடும் தொழில் தோன்றியது. எனவே தோட்டப் பயிர் செய்தல் பெண்களின் வேலையாகவே இருந்தது. கலப்பையை உழுவதற்குப் பயன்படுத்தத் தொடங்கிய காலத்தில் இருந்து விவசாயம் ஆண்களின் தொழிலாயிற்று. ஆப்பிரிக்காவில் கலப்பையைப் பயன்படுத்தியுள்ள இனக்குழு சமுதாயங்களில் இன்றும் இம்மாறுதல் நிகழ்ந்து வருவதைக் ö鑫拉。 ஆண் பெண் சமூக உறவுகள் உற்பத்தி முறை மாற்றங்களுக்கு ஏற்றபடி மாறுகிற பொழுது தந்தை வழி உரிமை முறை வலுப்படுகிறது. இச் செயல்பாட்டு முறை வேட்டையாடுதலோடு தொடங்குகிறது. ஆடு மாடு வளர்த்தலோடு வலுப்படுகிறது. ஆனால் ஆரம்பகால விவசாயத்தோடு தாய் வழிக்குத் திரும்புகிறது. ஆரம்பத்தில் தாய்வழி உரிமை முறை இருந்ததென்றால் மிகவும் பின்தங்கிய மக்கள் தாய்வழிமுறையையும், அவர்களைவிட முன்னேறிய மக்கள் தந்தை வழிமுறையையும் பின்பற்றுகிறார்களே, இது ஏன் என்று கேட்கலாம். இதற்கு விடையாவது: “வேட்டைப் பொருளாதாரம் தந்தையுரிமையை ஏற்படுத்தும் தன்மை வாய்ந்தது. இன்றும் பல வேட்டைச் சமுதாய இனக்குழு மக்கள் தந்தை வழியினராக