பக்கம்:பழங்கதைகளும், பழமொழிகளும்.pdf/72

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

W Q 8 以 8 ° @ 份 #,帕 8 $ 吻 物 ● 分 铬 砂 W ੱਛਾ % مه ه هو مه قي 5 iيقة قة}} قلة قة} اي ثقته . يَقيةِ என்ற கடைக்குட்டி பிறந்தான். இவன் தைரியமிக்கவன். பிறகு பூமி, முரடர்களான சைக்ளாப்ஸ் என்ற ஒற்றைக் கண் ராட்சசர்களைப் பெற்றாள். இடி, மின்னல், ஒளி ஆகிய சக்திகளை அவர்கள் ஜியுஸ்லிக்குக் கொடுத்தார்கள். அவர்கள் தேவர்களைப் போல இருந்தார்கள். ஆனால் நெற்றியில் ஒரு கண் இருந்தது. அவர்களுடைய வலிமையும், திறமையும் கைகளில் இருந்தது. இன்னும் மூன்று குழந்தைகள் பூமிக்குப் பிறந்தார்கள். அவர்கள் கோட்டஸ், பிரையேரியல், கைஸ் என்பவர்கள். இவர்களுக்கு 100 கைகள் இருந்தன. தங்களது பேருருவத்துக்கு ஏற்ற பெருவலிமை அவர்களுக்கு இருந்தது. இவர்களது உருவையும், பலத்தையும் கண்டு இவர்களால் தனக்கே ஆபத்து நேருமோ என்று தந்தை பயந்தான். மேற்கொண்டு யாரும் பிறக்கமுடியாதபடி பூமியின் கருப்பையினுள் சிசுக்களை நீண்ட காலம் தங்க வைத்தான். பூமி மூச்சு முட்டித் திணறினாள். பின்னர் அவள் தனது கணவனைப் பழி வாங்க முடிவு செய்தாள். தன்னுடைய குமாரர்களை அழைத்து அவர்களிடம் சொன்னாள்: “உங்கள் தந்தை காட்டுமிராண்டி, அவர் எனக்குச் செய்த வன்முறைக் குற்றத்திற்குப் பழிவாங்க வேண்டும். அவர்தான் முதலில் இயற்கைக்கு விரோதமாகக் குற்றம் புரிந்தவர்” என்றாள். குமாரர்கள் பயத்தால் ஒடுங்கிப் போயினர். குரோனஸ் மட்டும் துணிந்து பதிலளித்தான். “அம்மா உன்னுடைய திட்டங்களை மேற்கொண்டு நான் நிறைவேற்றுகிறேன். எனக்கு என் தந்தையின் மீது மதிப்பு மரியாதை எதுவும் இல்லை. ஏனெனில் அவர்தான் முதலில் வன்முறையை உன் மீது செலுத்தினார்.” பூமி குரோனஸ் கையில் ஒரு அரிவாளை (கதிர் அறுக்கும் அரிவாள்) கொடுத்து ஒரு புதரினுள் மறைந்து கொள்ளச் சொன்னாள். மறைந்து கொண்ட பின் தனது பழிவாங்கும் திட்டத்தை விவரித்தாள். வானம், பூமியோடு கூடுவதற்கு வந்தான். அவளை மறைத்து அவன் உடல் அவள் மீது கிடந்தது. மறைவிடத்திலிருந்து வந்த குரோனஸ் இடதுகையினால், வானத்தின் ஆண்குறியைப் பற்றி வலதுகையிலுள்ள அரிவாளால் அறுத்துத் தூர எறிந்தான். வழிந்த ரத்தம் பூமி மீது வழிந்து ஒட விடாமல் உறிஞ்சிக்கொண்டாள். அவ்வுதிரத்தினின்றும்