பக்கம்:பழங்கதைகளும், பழமொழிகளும்.pdf/78

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

郵翻。 靈盟鄧砸隱關船懿圈。。。。。。。 * 必 隐 级 * 伽 9 码 脚 ° 必 够 * w 纷 临 心 心 蜘 蔡 65 பூமித்தாய் தனக்குள்ளே நினைத்தாள். அவர்கள் கடலோரத்தில் மலைகளின் மீது திரிகிறபோது நாடுகளைப் பிரித்து இனம் காண்பார்கள். பூமித்தாய் வெள்ளப் பெருக்கில் துப்பினாள். நுரையுண்டாயிற்று. அவள் விரலால் நீரைக் கலக்கினாள். நுரை மிகுதியாகி உயர்ந்தது. அவள் பின்வருமாறு கூறினாள்: “எனது உடலில் இருந்து (மார்பு) நான் பெற்ற பிள்ளைகள் உணவு 4. a 32 பெறுவார்கள். அவள் மூச்சு துரையை உயரத் தூக்கியது. வானத்தந்தை குளிர்காற்றை நுரையீன்மீது ஊதினார். சிறு துளிகளாக நீர் பூமியின் மீது மழையாகப் பெய்தது. மலையுச்சிகளில் இது பனியாக உறையும். சமவெளியில் நீரோடைகளாக ஒடி எனது மடியில் மறையும் என்று பூமித்தாய் எண்ணினாள். பூமித்தாய் குளிர்ச்சியானவள். வானத்தந்தை வெப்பமானவர். பெண் குளிர்ச்சியும், ஆண் வெப்பமும் உடையவர்கள். வானத்தந்தை தனது உள்ளங்கையில் ஏழு மஞ்சள் நிற வித்துக்களை வைத்திருந்தார். “நமது குழந்தைகள் சூரியன் பிரகாசிக்காத காலத்தில் விளக்கு ஒளியில் தொழில் புரிவார்கள்.” தந்தையின் விதைகள் நிலத்தில் விழுந்து பன்மடங்கு விளைந்து பலன் தந்தன. மனித வித்துக்களும், விலங்கு வித்துக்களும் பூமித்தாயின் நான்கு கருப்பைகளில் உருவம் பெற்றுப் பெருகின. பறவைகள் முட்டையில் இருந்து வெளியேறுவது போல மனிதர்களும் விலங்குகளும் தோன்றினர். ஆனால் இவ்வுயிர்கள் முழுமையான வளர்ச்சியடைந்திருக்கவில்லை. இவை நெருக்கமான கூட்டங்களாகவும், இருளில் வாழ்ந்தவையாகவும் இருந்தன. இவை கடுஞ்சொற்கள் பேசின. இவற்றுள் சில இருளில் இருந்து தப்பித்து, வெளியேற முயன்றன. இவர்களுள் போஷாயன்ஸ்காயா என்பவன் மிகவும் அறிவு வளர்ச்சி பெற்றுத் தெய்வத் தன்மை பெற்றான். இவன் நான்கு