'மொழிபல பெருகிய பழிதீர் தேஎத்துப்
புலம்பெயர் மாக்கள் கலந்தினி துறையும்
முட்டாச் சிறப்பிற் பட்டினம்'
என்று பட்டினப்பாலை கூறுகின்றது.
'கலத்தரு திருவில் புலம் பெயர் மாக்கள்
கலந்தினி துறையும் இலங்கு நீர் வரைப்பு'
என்று சிலப்பதிகாரமுங் கூறுகின்றது. (கலம்-மரக்கலம். புலம்பெயர் மாக்கள்-அயல் நாடுகளிலிருந்து வந்த கப்பலோட்டிகள்).
'நலந்தரு திருவிற் புலம் பெயர் மாக்கள்
வேலை வாலுகத்து விரிதிரைப் பரப்பு'
(கலம்-மரக்கலம், நாவாய்; புலம் பெயர் மக்கள் வெளி நாட்டிலிருந்து வந்த கப்பலோட்டிகள்; வாலுகம்-மணல்.)
இவர்களை மணிமேகலை, "பரத்தொருங் கீண்டியபாடை மாக்கள்" என்று கூறுகின்றது (1:16), அவர்கள் தங்கியிருந்த வீடுகளில் இரவு முழுவதும் விளக்கு எரிந்தது. "மொழிபெயர்தே எத்தோர் ஒரியா விளக்கம்." (சிலம், 6:143) (ஒழியாவிளக்கு - விடிவிளக்கு ) வெளிநாட்டுக் கப்பலோட்டிகளோடு யவனர்களும் (கிரேக்கர், ரோமர்) தங்கியிருந்தார்கள்.
'கயவாய் மருங்கில் காண்போர்த் தடுக்கும்
பயனற வறியா யவனர் இருக்கையும்'
இப்படிப்பட்ட சிறந்த பட்டினத்தில் தமிழ் நாட்டுக் கப்பல் வாணிகர் பலர் இருந்தார்கள். பல கப்பல்களையுடைய பெரிய கடல் வாணிகருக்கு மாநாவிகர் என்று பெயர் கூறப்பட்டது (நாவிகர்- கப்பலையுடையவர். நாவாய்-கப்பல்). மாநாவிகர் என்னும் சொல் திரித்து மாநாய்கர் என்று வழங்கப்பட்டது. கண்ணகியின் தந்தை ஒரு
75