பக்கம்:பழந்தமிழர் கட்டடக் கலையும் நகரமைப்பும்.pdf/136

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நா. பார்த்தசாரதி

135


எழினி தானே மூன்றென மொழிப
அவைதாம் ஒருமுக எழினியும் பொருமுக
எழினியும் கரந்துவர லெழினியுமென
மூவகையே 40

என்று கூறப்படுகிறது. “பொருமுகப் பளிங்கி னெழினி”41 என்று மணிமேகலையிலும் எழினி பற்றி வருகிறது. சிலப்பதிகாரத்தின் இப்பகுதியிலிருந்து அரங்க நிருமானம் என்னும் மற்றொரு வகையான கட்டடக் கலையிலும் அவ்வரங்கின் உள்ளலங்கார வேலைப்பாடுகள் போன்ற வற்றிலும் பழந்தமிழர் தேர்ச்சி பெற்றிருந்ததையும் திறமை காட்டியிருப்பதையும் அறிய முடிகிறது. அரங்க நிருமாணக் கலையில் கட்டடத்துக்கான பொருள்களைத் தவிர உள்ளலங்காரமும் நிழற்படாமை மேடையில் நுழைய வெளியே தனித்தனி வாயில்கள் என்ற நுணுக்கங்களையும் கடைப்பிடித்திருக்கின்றனர். அரங்கிற்கு நிலம் வகுத்துக்கொள்ளுதல் பற்றிப் பரத சேனாபதியம் என்னும் பழைய நூலே இலக்கணம் கூறியிருப்பதாக42 அடியார்க்கு நல்லார் எழுதுகிறார்.

நிலங்கோடல் முதல் சந்திரன் குரு அங்காரகன் என்னும் வெண்ணீர்மை பொனீர்மை செந்நீர்மை என்னும் புகழ்மையைத் தமக்குரிமையாகப் பெற்ற முத்து மாலைகளாற் சரியும் தூக்கும் தாமமுமாக நாற்றுவது வரை அரங்கமைப்புக் கூறப்படுவதில் இடையே வேறுசில நுணுக்கமான செய்திகளும் அடைமொழியாலே அறியப் படக்கிடக்கின்றன. 43

இனி ஏற்ற வாயில் இரண்டுடன் பொலிய44 என்ற அடியுள் ஏற்ற என்ற அடைமொழியாற் கிடைக்கும் பொருள்களாய் அடியார்க்கு நல்லார் பின்வருமாறு கூறு வதைக் காணலாம். -

‘ஏற்ற’ என்றதனால் கரந்து போக்கிடனும், கண்ணுளர் குடிஞைப் பள்ளியும் அரங்முகம் அதிதெனர்,