பக்கம்:பழந்தமிழர் கட்டடக் கலையும் நகரமைப்பும்.pdf/198

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நா. பார்த்தசாரதி

197


மதுரை நகரத்து வீதியின் குடியிருப்பு வீடுகளில் முல்லைக்கொடி வளர்க்கும் வழக்கம் இருந்திருக்கிறது.54 பூக்களின் மணமும் நகரின் சுற்றுப்புறங்களிலும் மணக் கிற அளவு அட்டிற் புகையும் அப்ப வணிகர் அப்பம் சுடும் புகையும், அகிற்புகையும், யாகசாலை ஆவுதிப் புகையும், அரசன் அரண்மனை நறுமணங்களும் பரவும் என்று கூறப்பட்டுள்ளது. 55

இக்காரணங்களால் பொதிகைத் தென்றல் மதுரையின் மணங்களைச் சுமந்து மதுரைத் தென்றலாக மாறி வந்தது என்றும் கூறப்பட்டுள்ளது.56

தெருக்கள்

மதுரை மாநகரின் தெருக்கள் செல்வ வளம் மிக்கவையாயிருந்தன. கணவரோடு ஊடிய மகளிர் வெறுப்புடன் கீழற்றி எறிந்த அணிகலன்களும், சுமக்க முடியாமல் சலிப் பில் நீத்த நகைகளும், தாம் இயற்றிய சிற்றில்களைச் சிதைத்த இளைஞர்களோடு முரண்பட்டுச் சினந்த பெண்கள் அறுத்தெறிந்த முத்து மாலைகளும், நகரத் தெருக்களில் குப்பைகள் போல் குவிந்திருந்தன என்கிறார்.57 இந்திரன்து பெட்டகத்தைத் திறந்ததுபோல் செல்வ வளமிக்க நகரம் என்கிறார் இளங்கோ அடிகள்.58 மாட மாளிகைகளின் வரிசைகள் திங்களைப் பொடி செய்து சேறாகக் குழைத்துப் பூசியது போல வெண்மை மிகுந்து தோன்றின. 59

மதுரை நகரத் தெருக்களில் தேர்களின் ஒலியும் குதிரைகளின் கனைப்பொலியும், பரிகளின் கழுத்து அணி யான கிண்கிணி ஓசையும், யானைகளின் பிளிற்றொலியும் ஐவகை இசைக் கருவிகளின் ஒலியும் நிறைந்திருக்கும். இவ்வொலிகள் மேகத்தின் இடியொலியையும் செவியில் உறைக்காதபடி செய்தன.60