93
“நீ ஏதோ கோஞ்ச நாளைக்கு முன் வேலை கேட்டாய் இல்லே? இப்போது உதவி ஆசிரியர் வேலை இருக்கிறது. வேணுமானல் சேர்ந்து கொள்ளலாம்.”
வேலை கிடைத்தால் போதும் என்று உள்ளுர அவசரப்பட்டாலும் வெளியில் அதைக் காட்டிக் கொள்ளாமல் “சம்பளம்?” என்று இழுத்தேன்.
“எல்லோருக்கும் தருகிற மாதிரிதான் ஆரம்பத்தில் நாற்பது ரூபாய்” என்றார் கல்கி.
“இருந்தாலும், கத்திரி விகடனுக்கான ஏற்பாடுகள் ஆரம்பமாகி விட்டன. நிறையப் பணம் செலவு செய்து விட்டார் ஒருத்தர். அவருக்கு எப்படித் திருப்பித் தருவது என்று தெரியவில்லை” என்று பொய் சொன்னேன். விளம்பரம் தந்ததைத் தவிர நான் ஒரு செல்லாக் காசும் செலவழிக்கவில்லை.
“இதுவரை எவ்வளவு பணம் செலவழித்தாய்?” என்று கல்கி கேட்டார்.
“நூற்று அறுபது ரூபாய் இருக்கும்” என்று சொன்னேன். அதுவும் பொய்தான்.
“அப்படியா? அதை நான் இங்கே ஆபீஸில் கொடுக்கச் சொல்கிறேன். கொண்டு போய் பணம் போட்டவரிடம் திருப்பிக் கொடுத்து விடு” என்றார்.
அப்போதே விகடனில் வேலையில் சேர்ந்து கொண்டேன். சாயங்காலம் வேலை முடிந்து வீட்டுக்குப் போனதும் தி. ஜ. ர.விடம் விஷயத்தையெல்லாம் விவரமாகச் சொன்னேன். தாம் போட்ட திட்டம் வெற்றியடைந்தது பற்றி அவருக்கு ஏக சந்தோஷம். கூடவே என்னை ஒரு திட்டும் திட்டினர்.
“சுத்த அல்பமையா நீர். சொன்னதுதான் சொன்னீர். நூற்று அறுபது ரூபாய்க்கு மேலே உமக்கு நம்பரே தெரியாதா? அதிகமாகச் சொல்லியிருக்க வேண்டியதுதானே! கொடுக்கக் கூடிய இடத்தில் வாங்கியிருக்கலாம் இல்லையா?” என்று கடிந்து கொண்டார்.