பக்கம்:பவழபஸ்பம்.pdf/4

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பதிப்புரை


னித சமுதாயத்தில் இன்னமும் ஜடமாகவும் முடமாகவும் இருக்கின்ற விகாரங்களை—விவஸ்தை கெட்ட விஸ்வரூபங்களை அளந்து காட்டும் அடையாளச் சீட்டாக, 'சிறுகதை' இருக்க வேண்டும்.

மனித மனத்தை நிறைவு படுத்தும் வேலையை, கொஞ்சம் அழகாக எழுதத் தெரிந்த யாராலும் செய்து காட்ட முடியும். அதுவல்ல, சிறுகதை.

ஒரு மனத்தின் சேஷ்டையை மற்றொரு மனத்துக்கு எடுத்துக் காட்டுவது மட்டுமல்ல; அந்த மனத்தின் கசிவைப் பிரதிபலிக்கும் கண்ணாடியாகவும் அது பொருந்தி இருக்க வேண்டும்.

அப்படிப்பட்ட கதையைத்தான் 'சிறுகதை'யாகக் கொள்ள முடியும்.

காலத்துக்கேற்ற மாதிரி—சூழ்நிலைக்குத் தகுந்த விதத்தில் எந்த ஒரு பூவும் தன் நிறத்தை மாற்றிக் கொள்வதில்லை. ஆனால் மனிதருக்குப் புத்தி சொல்லக் கிளம்பும் சில புஸ்வாண எழுத்தாளர்கள் மட்டும் உடயை மாற்றிக்கொள்வதுபோல் மனத்தை மாற்றிக்கொண்டு, எழுதுவதையெல்லாம் 'கதை' என்றுகதைக்கின்ற இந்தக் காலகட்டத்தில், உங்கள் கரங்களில், உண்மையான உயிருள்ள கதைகளைச் சிருஷ்டித்த பெருமைக்குரிய பேரறிஞர் அண்ணா அவர்களின் சிறுகதைத்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பவழபஸ்பம்.pdf/4&oldid=1638391" இலிருந்து மீள்விக்கப்பட்டது