பக்கம்:பவழபஸ்பம்.pdf/46

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பஸ்பம் 45 பீர்கள். இல்லை தோழர்களே! கன்னித் தமிழின் கரு வூலத்தைத் தேடியல்ல, நான் அக்கவிதையைக் கண்டது. என் நெஞ்சத்திரை முன்னே, இரு காட்சிகள் ஒரே சமயத் திலே நின்றன. ஒன்று சர் சண்முகம், அண்ணாமலைப் பல் கலைக்கழகத்திலே, அறிவாளிகள் சுவைக்க. மாணவர் மகிழக் கம்பீரமாக நின்று, சொற்பெருக்காற்றிய காட்சி; மற்றொன்று, தேரிலே தலைவன், அவன் உரைகேட்கும் பாகன், அரவு நோக்கி வாடிடும் தலைவி, எனும் காட்சி; இரண்டும் நின்றன! சர் சண் 'தேறியோருக்குத் தெளிவுரையாற்றும், முகத்தையும், தேரிலே அமர்ந்து பாகனை விரைந்து செலுத்தச் சொன்ன தலைவனையும், ஒருங்கே கண்டது ஏன்?' என்பீர். கண்டேன், இதோ உம்மிடம் விண்டிடு வேன்; காரணம் சரியா, என்பதனை முடிவு செய்யும் கடமை, எனதன்று, உமதே! சர் சண்முகம், தென்னாட்டுத்தாகூர், இந்தியாவின் கிளாட்ஸ்டன், என்று புகழ இழிமனமற்ற எவரும் தயங் கார்! அவருடைய அரசியல் அறிவும், தரணியறிந்த தன்மை யும், தளராத்திறனும், நிர்வாக நேர்மையும், எவருமறிவர்! திராவிடமணி-மாசு இல்லை! தமிழகத்தின் நிலவு- வளர் பிறை! உன்னதமான ஊற்று, அவருடைய ஆற்றல்! ஆம்! சர் சண்முகம், ஏடெடுப்போரின் மொழிமாலையைச் சூடிட வேண்டிய பருவத்தைக் கடந்து விட்ட காவலர். கொங்கு புகழ் கோமான்' மட்டுமல்ல, மங்காப்புகழைத் தமிழ் மாநிலமும், அதை அடுத்த தரணிபலவும் பரப்பி அரச அவை யிலும், அறிஞர் சபையிலும், களத்திலும் கொலுமண்ட பத்திலும், எங்கும் புகழ்பெற்று விளங்கும் ஆற்றலரசர். ஆயினும், அவரைத் தென்னாட்டுத்தாகூர் என்று கூறேன்! ஏன் கூறல் வேண்டும்? இவர், எந்நாட்டுவீரர், தமிழகத்தின் பங்கம் விளைவிக்கக் தளபதி. தாகூருக்கு வங்கத்திலே, கொடுங்கையில் வஞ்சனை வாளேந்தினார் எவருமில்லை! தாகூரின் நாத நடையினைக் கண்டதும், சங்கை கொண்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பவழபஸ்பம்.pdf/46&oldid=1637232" இலிருந்து மீள்விக்கப்பட்டது