பக்கம்:பவழபஸ்பம்.pdf/49

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

48 பவழ ஏகாதிபத்தியத்தின் போக்கைக் கண்டிக்கத் தேசியத் திருக் கூட்டத்திலே பலருண்டு. பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தைச் சின்னாபின்னமாக்குவேன் என்று சினந்து சூள் உரைத் தோரையும், அதன் பிடரியைப் பிடித்துக் குலுக்குவேன் என்று முழக்கமிட்டோரையும் நாடு கண்டிருக்கிறது. எனக்குத் தெரிய, ஒரு தேசீயப் பிரசங்கியார் (இன்று அவர் இந்து மகாசபை வீரராக வேடமெடுத்துள்ளார்) ஒருமுறை பிரிட்டனைக் கண்டித்துப் பேசுகையிலே கூறினார், “மகா ஜனங்களே! பிரிட்டனிலே என்ன இருக்கிறது என்று எண்ணு கிறீர்கள்? வெறும் சுண்ணாம்பும், நிலக்கரியும்! நிலக்கரிக் காகச் சுரங்கங்கள் தோண்டித் தோண்டி, பிரிட்டன் பாழாகி விட்டது. முப்பதுகோடி இந்தியரும் (அன்றைய ஜனத் தொகை 30 கோடி) சேர்ந்து மூச்சு விட்டால், பிரிட்டன் ஆடிக்காற்றிலே சிக்கிய இலவம் பஞ்செனப் பறந்துபோகும். இந்த உரைகேட்ட வீரர் குழாம் கைதட்டி ஆரவாரித்ததும், எனக்குத் தெரியும். ஆகவே நான், சர் சண்முகம் அவர்கள் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தைக் கண்டித்துப் பேசியதை மாபெரும் வீரம் என்று கூறவில்லை. 1920லே அம்மொழி வீரமாக இருந்திருக்கலாம். இன்றோ! அம்மொழி பழங் கஞ்சி. வீட்டுக்கு வீடு, கலயத்திலே அது உளது! இந்நாட்டுச் சொற்பொழிவாளரின் அரிச்சுவடியே அதுவாக இருக்கிறது. எனவே, அந்தப் பகுதியல்ல எனக்கு ஆனந்த மூட்டியது. நாட்டுவிடுதலை பற்றிப் பேசிடாத தலைவர் இல்லை. ஆனால், அந்த விடுதலை கிட்டாததன் காரணம் என்ன என்று உசாவிடுவோர் வெகு சிலரே. உண்மை தெரிந்தபின், அதனைத் தைரியமாகக் கூறிடுவோர் அதனினும் மிகச் சிலரே. உரைத்ததோடு அமையாமல், உறுதியுடன் நின்று பணிபுரிவோர் அதனினும் மிகமிகச் சிலரே. அன்னிய நாட்டினரை மிரட்டவோ, மயக்கவோ, இங்கு ஆட்கள் அனேகர். ஆனால் இங்கு விடுதலைக்கு விரோதிகளாக உள்ளவர்களை 'சற்றே விலகு என்று கூறும் ஆண்மை யாளர் மிகக் குறைவு.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பவழபஸ்பம்.pdf/49&oldid=1637292" இலிருந்து மீள்விக்கப்பட்டது