பக்கம்:பாசமுள்ள நாய்க்குட்டி.pdf/35

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

33

பரிசு கிடைத்த மகிழ்ச்சியில் அந்தக் கிழவர் "எல்லாம் நன்மைக்குத் தான்!” என்று கூறினார். இனிமேல் எக்காரணத்தைக் கொண்டும் இல்லாத பேய்களைப் பற்றிப் பேசமாட்டேன் என்று செய்தியாளர்களிடம் உறுதி கூறினார்.

பேயின் அச்சம் நீங்கிப் பெண்கள் ஏரிக் கரைக்குச் சென்றனர். மறுநாள் சந்தையில் பெர்ரிப் பழங்கள் கூடை கூடையாக வந்து இறங்கின.