பக்கம்:பாசமுள்ள நாய்க்குட்டி.pdf/57

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

55


கடைசியில் அவர் மகனைக் கேட்டார். மகனே, நீ உனக்குக் கவலை ஏற்படக் கூடிய காலத்தில் புகலடையக் கூடிய இடங்களை உண்டாக்கிக் கொண்டாயா?

“ஆம் அப்பா. அழகான மலைச்சாரல்களிலும், ஆற்றங்கரைகளிலும், தென்னங்தோப்புகளின் இடையிலும் மனைகளை

வாங்கி புதுப்புது மாதிரிகளில் பல மாளிகைகளைக் கட்டியிருக்கிறேன். கோடையின் துன்பத்தைப் போக்கிக் கொள்ள மேலைநாட்டு மாளிகைகளில் ஒன்றில் போய் இருக்கலாம். வாடைக் காலத்தில் கீழை நாடுகளில் உள்ள ஒரு மாளிகையில் இருக்கலாம். இப்படி ஒவ்வொரு பருவத்திலும் ஒவ்வொரு