இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
66
கடைக்குப் போய் ஏதாவது பொருள் வாங்கி வரச் சொன்னாலும் இப்படித்தான்.
“இதோ ஒரு நொடியில்” என்று பதில் வரும்.
சிறிது நேரங்கழித்துத்தான் புறப்படுவான்.
“நீ எப்பொழுதுதான் திருந்தப் போகிறாயோ! வேறு எது போனாலும் திரும்பப் பெற்று விடலாம். ஓடிவிட்ட காலத்தைத் திரும்பப் பெற முடியாது. காலத்தோடு செய்ய நீ எப்பொழுது பழகப் போகிறாய்” என்று வருத்தப்படுவார் அப்பா.
“நீங்கள் சொன்ன வேலையை நான் செய்யவில்லையா? சிறிது நேரங்கழித்துச் செய்வதால் என்ன கெடுதல்?” என்று திருப்பிக் கேட்டான் அண்ணாமலை.
“அப்படியல்ல. காலத்தின் அருமையை நீ ஒரு நாள் உணரத்தான் போகிறாய்” என்று சொன்னார் அப்பா.
அந்த நாள் வந்துவிட்டது.