பக்கம்:பாச்சோறு, குழந்தைப்பாடல்கள்.pdf/11

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாவலரேறு பெருஞ்சித்திரனார்


தென்மொழி, தமிழ்ச்சிட்டு இதழ்களின் வாயிலாகத் தனித் தமிழுணர்வை எல்லாத் திசைகளும் ஏந்தச் செய்தவர் பெருஞ்சித்திரனார்.
தமிழின் மொழிநடை வடிவங்களிலும் யாப்பு வடிவங்களிலும் தனிமுத்திரை பதித்த பேராற்றல் இவர் எழுத்திற்கு உண்டு.
சேலத்தில் இரா. துரைசாமி - குஞ்சம்மாள் இருவரின் மகனாக 10-03-1933 இல் பிறந்து 11-06-1995 இல் - 62ஆம் அகவையில் மறைந்த இவரின் வாழ்வு, தமிழ்க்காப்புப் போராட்ட வாழ்வாகத் திகழ்ந்த பெருமையுடையது.
இந்தித்திணிப்பை எதிர்க்கும் கனல் தெறிக்கும் பாடல்களால்


 

பாவலரேறு பெருஞ்சித்திரனார்

9