இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
உன்னைக் கொண்டு வந்தே, இவ்
உலகில் விட்டது யார் சொல்?
அன்னை! அன்னை! அன்னை - என்
அன்னை! அன்னை! அன்னை!
கண்ணைப் போல உன்னையே
காத்து வருவது யார் சொல்?
அன்னை! அன்னை! அன்னை - என்
அன்னை! அன்னை! அன்னை!
எண்ணெய் இட்ட விளக்குப் போல்
இரவில் காத்தது யார் சொல்?
அன்னை! அன்னை! அன்னை - என்
அன்னை! அன்னை! அன்னை!
உண்ண உண்ணப் பாலையே
ஊட்டிக் கொடுத்தது யார் சொல்?
அன்னை! அன்னை! அன்னை - என்
அன்னை! அன்னை! அன்னை!
பாவலரேறு பெருஞ்சித்திரனார்
17