இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
கண்ணே! மணியே! என்றுன்னைக்
கட்டிக் கொண்டது யார் சொல்?
அன்னை! அன்னை! அன்னை - என்
அன்னை! அன்னை! அன்னை!
பொன்னே! பூவே! என்றுன்னைப்
போற்றிப் புகழ்ந்தது யார் சொல்?
அன்னை! அன்னை! அன்னை - என்
அன்னை! அன்னை! அன்னை!
உன்னைக் காக்க மருந்துண்டே
உணவை வெறுத்தது யார் சொல்?
அன்னை! அன்னை! அன்னை - என்
அன்னை! அன்னை! அன்னை!
மண்ணில் இன்றும் என்றும் நீ
மறவா திருப்பது யார் சொல்?
அன்னை! அன்னை! அன்னை - என்
அன்னை! அன்னை! அன்னை!
18
பாச்சோறு