இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
'க, கா' என்றே காகம் கரையும்!
'கி, கீ' என்றே கிளிகள் சொல்லும்!
'கு, கூ' என்றே குயில்கள் கூவும்!
'கெ, கே' என்றே கோழிகள் கேவும்!
'கொ, கோ' என்றே சேவல் கூவும்!
'கை, கெளக்' என்னும் வானங் கோழி!
பாவலரேறு பெருஞ்சித்திரனார்
31