இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
குடையும் செருப்பும் பேசின - பல
குறைகள் சொல்லி ஏசின.
நடையில் நடந்த நாடகம்!- இதை
நாமெல் லாரும் பாடுவோம்!
குடை: | செத்த மாட்டின் உறுப்பே - தோல் |
செருப்பே! உன்மேல் வெறுப்பே! | |
செருப்பு: | முகத்தைப் பார்த்தால் கறுப்பே - |
உடல் முழுதும் கம்பி விரிப்பே! | |
குடை: | காலில் கிடக்கும் எருமை! - உன் |
கதையில் என்ன பெருமை! | |
செருப்பு: | நெருப்பின் மீது நடப்பேன் - |
குத்தும் நெருஞ்சி முள்ளில் படுப்பேன்! | |
குடை: | நிழலை என்றும் கொடுப்பேன் - |
வந்து நனைக்கும் மழையைத் தடுப்பேன். |
பாவலரேறு பெருஞ்சித்திரனார்
37